தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த ஸ்ரீரெட்டி, சினிமாவில் நடிகைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். திடீரென ஒருநாள் தன் மேலாடையை அகற்றி, அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டார். அத்துடன், யார் யாரெல்லாம் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்றும் ட்விட்டரில் ஒரு லிஸ்ட் வெளியிட்டார்.
இதனால் தெலுங்கு நடிகர் சங்கம் அவருக்கு நடிக்க தடை விதித்தது. ஸ்ரீரெட்டிக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையம் 20 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. இதனையடுத்து, தெலுங்கு நடிகர் சங்கம் அவர் மீதான தடையை நீக்குவதாக அறிவித்தது.