பாலு மீண்டு வந்துட்டார்... கொரோனா நெகடிவ் என ரிசல்ட்!!

திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (11:17 IST)
எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது என தகவல். 

 
பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் கடந்த ஐந்தாம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமாக வேண்டும் என ஒட்டுமொத்த திரையுலகமே பிரார்த்தனை செய்தது. 
 
இந்த நிலையில் தனது தந்தையின் உடல்நிலை குறித்து அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறார் எஸ் பி பியின் மகன் சரண். அந்த வகையில் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது என தெரிவித்துள்ளார். 
 
அதோடு எனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது எனவும் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார். மீண்டு வா பாலு என பலரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்காக பிராத்தனை செய்த நிலையில் இந்த பிராத்தனைகள் கைக்கொடுத்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்