சிம்புவை பாராட்டிய தனுஷ் மச்சினிச்சி சௌந்தர்யா!

ஞாயிறு, 13 நவம்பர் 2016 (10:49 IST)
நடிகர் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய அச்சம் என்பது மடமையடா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு தடைகளுக்கு பின்னர் ஒருவழியாக கடந்த வெள்ளிக்கிழமை இந்த திரைப்படம் வெளியாகியது.


 
 
காதலை மையமாக வைத்து உருவாகிய இந்த படம் இளைஞர்களை கவர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் காதலை மையமாக வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் பெரிய ஹிட் கொடுத்தது.
 
இந்த கூட்டணி தற்போது மீண்டும் காதல் சப்ஜெக்டில் அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தை கொடுத்திருக்கிறது. தடைகள், எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


 

 
இந்த படம் குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த், படத்தின் இயக்குனர் கௌதம் மேனன், நடிகர் சிம்பு மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்