சினேகாவுக்கு இரண்டாவது குழந்தை – பிரசன்னா டிவிட்டரில் மகிழ்ச்சி !

வெள்ளி, 24 ஜனவரி 2020 (16:28 IST)
நடிகை சினேகாவுக்கு இன்று இரண்டாவதாகப் பெண் குழந்தை இன்று பிறந்துள்ளதை அவரது கணவர் பிரசன்னா அறிவித்தார்.

புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக பட்டாஸ் திரைப்படத்தில் நடித்தார். இந்நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமானார்.

இன்று சினேகாவுக்கு இரண்டாவதாக மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதைத் தன்னுடைய டிவிட்டரில் ‘தைமகள் வந்தாள்’ என்று அறிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்