அதனால்தான் நான் எதுவும் பேசல! பொள்ளாச்சி சம்பவத்திற்கு சமந்தாவின் ஷாக்கிங் பதில்!

வெள்ளி, 22 மார்ச் 2019 (14:51 IST)
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இச்சம்பவத்தில் ஈடுபட்ட  4 பெரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் அவர்களுக்கு குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 
 
இருந்தாலும் இவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த தண்டனை போதாது , அரபு நாடுகளில் கொடுக்கப்படும் தண்டனையை போன்று கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டுமென பொதுமக்களும் , பிரபலங்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். 
 
ஆனால், ஒரு சில முன்னணி நடிகைகள் இதுகுறித்து வாய் திறக்காமல் இருந்தனர். அதில் முன்னணி நடிகையான சமந்தாவும் ஒருவர். 
 
இந்நிலையில் சமீபத்தில் இதுகுறித்து பேசிய சமந்தா, இது மாதிரியான  சம்பவங்களை அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது. சில ஆயிரம் பேருக்கு தெரிந்த அந்த சம்பவம், நான் பேசுவதால் பல லட்சம் பேருக்கு தெரியும். ஆதலால் நாமே அதை விளம்பரப்படுத்தியது போலாகி விடும். என்பதால் தான் அதை பற்றி நான் எதுவும் பேசவில்லை என்று கட்டுக்கதை கட்டியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்