பொள்ளாச்சி விவகாரம் - பிரபல காங்கிரஸ் நிர்வாகிக்கு சம்மன்

வியாழன், 21 மார்ச் 2019 (17:38 IST)
சில நாட்களுக்கு முன்னர் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு, சதீஸ், வசந்தகுமார், முருகன், சபரிராஜ் ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான 4 பேரும் பல தகவல்களை போலீஸாரிடம் கூறியுள்ளதாகத் தெரிகிறது.இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக செய்து வருகின்றனர். தற்போது சிபிசிஐடி போலீஸார் இது சம்பந்தமான விசாரணைக்கு தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ’திருநாவுகரசர் யார் என்றே எனக்குத் தெரியாது என்று தெரிவித்ததார் ’என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்