எஸ் ஜே சூர்யாவின் அடுத்தப் படத்தலைப்பு அறிவிப்பு

திங்கள், 1 அக்டோபர் 2018 (17:26 IST)
மாயா, மாநகரம் போன்ற தரமானப் படங்களைத் தயாரித்த பொடென்ஷியல் ஸ்டூடியோவின் அடுத்தப் படத்தயாரிப்பாக எஸ் ஜே சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் ஜே சூர்யா இறைவி படத்துக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஸ்பைடர் மற்றும் மெர்சல் ஆகிய படங்களில் வில்லனாக் நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார். மேலும் அவர் கதாநாயகனாக நடித்து நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் இரவாக்காலம் போன்ற படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன.

இந்நிலையில் அவர் அடுத்து கதாநாயகனாக நடிக்கும் மற்றுமொரு படத்தின் அறிவுப்பு வெளியாகி இருக்கிறது. சிறிய பட்ஜெட்டில் தரமான படங்களைத் தொடர்ந்து தயாரித்து வரும் எஸ் ஆர் பிரபுவின் தயாரிப்பு நிறுவனமான பொடென்ஷியல் ஸ்டீடியோவின் சார்பில் ஒரு நாள் கூத்து படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கும் இந்த படத்தின் தலைப்பு ‘மான்ஸ்டர்’ என வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார். ஜஸ்டின் பிராபகரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

விறுவிறுப்பான த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்