சிவகார்த்திகேயனின் அடுத்த பட கதை பற்றி வெளியான தகவல்!

வெள்ளி, 16 ஜூன் 2023 (08:01 IST)
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. மாவீரன் ஷூட்டிங் முடிந்ததும் படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் காஷ்மீரில் தொடங்கியது.

காஷ்மீரில் படக்குழு சில நாட்களாக முகாமிட்டு ஷூட்டிங்கை நடத்திய நிலையில் இப்போது பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்னை திரும்பிய நிலையில்,  விரைவில் மீண்டும் அங்கு சென்று ஷூட்டிங் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கதை பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு ராணுவ வீரராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஒரு ராணுவவீரரின் கதையைதான் இந்த படத்தில் எடுப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் க்ளைமேக்ஸில் சிவகார்த்திகேயன் இறந்துவிடுவது போல உருவாக்கப்பட்டுள்ளதாம் திரைக்கதை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்