சிவகார்த்திகேயன் பட இயக்குநர் வீட்டில் நிகழ்ந்த சோகம்!

திங்கள், 22 மார்ச் 2021 (18:47 IST)
இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமாரின் தாயார் இன்று காலமானார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ரவிக்குமார். இப்படத்திற்குப் பிறகு இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் படத்தை இயக்கிவருகிறார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரவிக்குமாரின் தயார் உடல்நிலைக்குறைவால் இன்று காலமாகிவிட்டதாக ரவிக்குமாரின் நெருங்கிய நண்பரும் இயக்குநருமான கவுரவ் நாராயணன் தெரிவித்துள்ளார். சினிமாத்துறையினர் ரவிக்குமாரின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்