இயக்குனர் நெல்சனை கோர்த்துவிட்ட சிவகார்த்திகேயன்: வைரல் டுவீட்!

வியாழன், 28 ஜனவரி 2021 (17:33 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளிவந்தது என்பதும் இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் நிறுவனமும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது
 
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அடுத்து சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ என்ற படத்தை இயக்கி முடித்தவரும் தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இருப்பவருமான நெல்சன் தனது டுவிட்டரில் இந்த அறிவிப்புக்கு தனது வாழ்த்தினை தெரிவித்து இருந்தார் 
 
இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன் ’டாக்டர் அப்டேட் எதுவும் இல்லையா? விஜய் சார் படம் அப்டேட் எங்கே? என்று கூறி ’எப்படி கோர்த்து விட்டுட்டேனா என்று நகைச்சுவையுடன் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். இந்த டுவிட்டர் போது வைரலாகி வருகிறது

Nandri na

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்