நயன்தாராவுக்கு ’கோயிலில் அர்ச்சனை’ செய்த வெளிநாட்டு ரசிகர் ! வைரல் போட்டோ

புதன், 20 நவம்பர் 2019 (14:10 IST)
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவில் தனது திறமையால் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர், தனது படங்களுக்குக் கதைகளை தேர்வு செய்யும் விதமும், இவரது நடிப்பாற்றலும் இவரது படங்களுக்கு எதிர்பார்பை  உருவாக்கி வருகிறது.
நடிகை நயன்தாராவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த தீவிர ரசிகர் ஒருவர் விநாயகர் கோயிலில் பிராத்தனை செய்தபோது,நடிகை  நயன்தாரா பெயரில், சிறப்பு அர்ச்சனை செய்துள்ளார்.
 
மேலும் இந்த அர்ச்சனை செய்ததற்கான சீட்டையும் அவர் போட்டோ பிடித்து சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டார். இது வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்