சிம்பு நடிப்பில் கடந்த 3 வருடங்களில் ஒரு படமும் வெளியாகவில்லை. அதற்குமுன் வெளியான போடா போடி, ஒஸ்தி என அனைத்தும் தோல்விப் படங்கள். இப்படியொரு நிலையில் எந்த நடிகரின் படமோ, டீஸரோ வெளியானால் ரசிகர்கள் கண்டுக்காமல் செல்வதுதான் வழக்கம். ஆனால், சிம்புவின் விஷயத்தில் நடந்தது தலைகீழ் ஆச்சரியம்.
என் படத்துக்கு ரசிகர்கள் இடையே கிடைத்து உள்ள இந்த வரவேற்பு மகத்தானது. என் ரசிகர்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் பிடித்த வகையில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இவ்வளவு இடைவெளிக்கு பிறகும் எனக்கும் என் படங்களுக்கும் இந்த அளவுக்கு வரவேற்பு கொடுத்து இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. எனக்கும் அவர்களுக்கும் உள்ள பந்தத்தை பலபடுத்தி அவர்களுக்காகவே மேலும் நல்ல படங்கள் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.