மீண்டும் பாலிவுட்டில் சில்க் ஸ்மிதா பயோபிக்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (09:23 IST)
சில்க் ஸ்மிதா பற்றிய மர்மங்கள் இன்னும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகின்றன. இதையடுத்து அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து கல்லா கட்டியது பாலிவுட்.

தமிழ் சினிமாவில் 80 களில் இருந்து 90 களின் தொடக்கம் வரை கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. எப்படி ரஜினி கமல், கவுண்டமணி & செந்தில் மற்றும் இளையராஜா ஆகியோர் படத்தின் வியாபாரத்தை தீர்மானித்தார்களோ அதுபோல சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி நடனமும் படத்தின் வியாபாரத்தை நிர்ணயித்தது. கவர்ச்சி நடிகையாக மட்டுமில்லாமல் அலைகள் ஓய்வதில்லை மற்றும் சூரக்கோட்டை சிஙகக்குட்டி ஆகிய படங்களில் மாறுபட்ட வேடங்களிலும் நடித்துள்ளார் சில்க்.

இந்நிலையில் 1995 ஆம் ஆண்டு தன்னுடைய தற்கொலை செய்துகொண்ட சில்க் ஸ்மிதாவின் மரணத்துக்குப் பின்னான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் அவரின் வாழ்க்கையை தமிழ் திரைப்படமாக எடுக்கும் முயற்சி தற்போது நடந்து வருகிறது.

ஏற்கனவே பாலிவுட்டில் தி டர்ட்டி பிக்சர் எனும் பெயரில் இந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு புனைவு கலந்து உருவாக்கப்பட்டது. இந்த படத்துக்காக வித்யா பாலன் தேசிய விருதும் பெற்றார். இந்நிலையில் இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக சில்க் ஸ்மிதாவின் இளமைக் கால வாழ்வை மட்டும் உருவாக்கப் போவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த படத்தில் சில்க் ஸ்மிதா நடிக்க மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்