பிரபல பாடகிக்கு ஆன்லைனிலேயே நடந்த வளைகாப்பு

ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (20:36 IST)
பிரபல பாடகிக்கு ஆன்லைனிலேயே நடந்த வளைகாப்பு
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் சமீபத்தில் அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூகவலைதளங்களில் தெரிவித்ததார் என்பதும், இதனைஅடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த அவரது பெற்றோர்கள் முடிவு செய்த நிலையில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு காரணமாக சுபநிகழ்ச்சிகளுக்கு 100 பேர்கள் மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு காரணமாக ஆன்லைனிலேயே அவருக்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
 
இதனை அடுத்து வளைகாப்பு நிகழ்ச்சியில் மிக குறைந்த உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர் என்பதும் மற்ற நண்பர்கள் மற்றும் தோழிகள் ஆன்லைனிலேயே ஷ்ரேயா கோஷலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்