ஷங்கர் & ரண்வீர் சிங் இணையும் பாலிவுட் படம்…. இந்த படத்தின் ரீமேக்கா?

வெள்ளி, 19 மார்ச் 2021 (08:54 IST)
இயக்குனர் ஷங்கர் இப்போது பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங்கை வைத்து ஒரு படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார்.

இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்த ஷங்கர் இப்போது வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ஐம்பதாவது திரைப்படத்தில் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படம் அவரது 15 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பட்ஜெட் ஷங்கரின் கடைசி படங்களை விட மிகவும் கம்மியாம். ரூ 170 கோடி ரூபாய் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 மாதங்களுக்குப் பிறகே தொடங்க உள்ளதாம். இந்நிலையில் இப்போது படத்துக்கான மற்ற கலைஞர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறதாம்.

இந்நிலையில் இதற்கிடையில் பாலிவுட்டில் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருக்கும் ரண்வீர் சிங்கை வைத்து ஒரு படத்தையும் இயக்க உள்ளாராம். இந்த இரு படங்களையும் அவர் ஒரே நேரத்தில் மாறி மாறி இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஷங்கர் எப்போதும் ஒரு படத்தை எடுத்து முடிக்க 2 முதல் 3 ஆண்டுகள் எடுத்துக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்குவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு படத்தை இயக்குவதை எளிதாக்க ஷங்கர் ஒரு முடிவெடுத்துள்ளாராம். அது என்னவென்றால் ரண்வீர் சிங்கை வைத்து அவர் இயக்கும் படம் புதிய கதைக் கொண்ட படம் இல்லையாம். ஏற்கனவே அவர் இயக்கத்தில் வெளியான அந்நியன் படத்தின் ரீமேக்காம். இதனால் எளிதாக படப்பிடிப்பை முடித்துவிடலாம் என ஷங்கர் நினைக்கிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்