இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பாளர்களின் நிலை இதுதான்!

வியாழன், 17 ஜூன் 2021 (08:18 IST)
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படங்களுக்கு சொந்தக்காரரான இயக்குனர் ஷங்கர் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் பெரும்பாலானவர்கள் இப்போது படங்களைத் தயாரிப்பதே இல்லையாம்.

ஜெண்டில் மேன் படம் மூலமாக அறிமுகமான இயக்குனர் ஷங்கர் தனது படங்களின் பிரம்மாண்டங்களுக்காக தனித்து தெரிந்தார். ஆனால் அவர் படங்களின் பிரம்மாண்டம் என்பது கதையில் இல்லாமல் பாடல்களை உருவாக்குவதிலும் தேவையில்லாத செட்களைப் போடுவதிலும்தான் அதிகம் கவனம் செலுத்தியது என விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் என்னதான் ஷங்கர் பிரம்மாண்டமான படங்களை எடுத்தாலும், அவரின் தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் லாபம் சம்பாதித்தது இல்லை என சொல்லப்படுகிறது. இதுவரை அவர் 9 நிறுவனங்களுக்காக படம் இயக்கியுள்ளார். ஆனால் அதில் இப்போது 7 நிறுவனங்கள் தயாரிப்பிலேயே ஈடுபடுவதில்லையாம். இதில் ஏவிஎம், ஆஸ்கர் பிலிம்ஸ், மற்றும் கே டி குஞ்சுமோனின் நிறுவனம் ஆகிய முன்னணி நிறுவனங்களும் அடக்கம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்