பார்ட் 2 படங்களில் ஆர்வம் காட்டும் சசிகுமார்

செவ்வாய், 13 மார்ச் 2018 (13:15 IST)
‘நாடோடிகள்’ படத்தைத் தொடர்ந்து ‘சுந்தர பாண்டியன்’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார் சசிகுமார். 
சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து வருகிறார் சசிகுமார். ஏற்கெனவே 2009ஆம் ஆண்டு ரிலீஸான  படத்தின் தொடர்ச்சியாக இது உருவாகி வருகிறது. அஞ்சலி, அதுல்யா ரவி என இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். மதுரையில் இதன்  படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், சசிகுமார் நடிப்பில் ஏற்கெனவே ரிலீஸான ‘சுந்தர பாண்டியன்’ படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக இருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய  எஸ்.ஆர்.பிரபாகரனே இந்தப் படத்தையும் இயக்குகிறார்.
 
சசிகுமார் வரிசையாக தோல்விப் படங்களாகக் கொடுத்து வருவதால், ஏற்கெனவே ரிலீஸான வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகத்தில் ஆர்வம் காட்டி வருகிறார் என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்