சந்தானம் அன்புச் செழியன் கூட்டணி… 6 வருடத்துக்குப் பிறகு கம்பேக் கொடுக்கும் இயக்குனர்!

வியாழன், 20 அக்டோபர் 2022 (15:45 IST)
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது சந்தானம் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த குலுகுலு திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

இதையடுத்து உருவாகும் தமிழ் மற்றும் கன்னட படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்குகிறார். சந்தானம் 15 என்ற தற்காலிக தலைப்போடு இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி சத்தமே இல்லாமல் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் சந்தானம் நடிப்பில் அடுத்து உருவாகும் படத்தை தயாரிப்பாளர் அன்புச்செழியன் தயாரிக்க உள்ளார். இந்த படத்தை இந்தியா பாகிஸ்தான் பட இயக்குனர் ஆனந்த் இயக்க உள்ளாராம். முதல் படம் வெளியாகி 6 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தை அவர் இயக்க உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்