இந்தியில் முதல் வாய்ப்பை பெற்ற சஞ்சனா சிங்

வியாழன், 2 ஜூலை 2015 (09:34 IST)
ரேனிகுண்டாவில் பாலியல் தொழிலாளியாக அறிமுகமானவர் சஞ்சனா சிங். அதன் பிறகு பல படங்கள். நாயகியாக நடிக்க வந்த என்னை சினிமா கவர்ச்சி நடிகை ஆக்கிவிட்டது. வெறும் ஒரு பாடலுக்கு ஆட விருப்பமில்லை. கேரக்டர் ரோல் வேண்டும் என்று அவர் மன்றாடி கேட்டும் மனது வைக்கவில்லை தமிழ் சினிமா. 

சஞ்சனா சிங்கா? கவர்ச்சி ரோல்தான், ஒரு பாடலுக்கு குத்தாட்டம்தான். முடிவில் உறுதியாக நின்றனர் நம்மாட்கள்.
 
கடைசியாக இந்திப்பட வாய்ப்பு ஒன்று அவருக்கு கிடைத்துள்ளது. சச்சின் குப்தா இயக்கியுள்ள, தோடா லுப்த் தோடா இஸ்க் படத்தில் சஞ்சனா சிங் நடித்துள்ளார். படத்தில் இவருக்கு ஒரு நடனமும் இருக்கிறது. இந்திப் படம் என்ற ஆரம்ப பயம் தெளிந்து, ரசிகர்கள் ஆதரவு இருந்தால் இந்தியில் ஒரு ரவுண்ட் வருவேன் என பளிச்சென பேசுகிறார்.
 
எங்க ஆதரவு எப்போதும் உண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்