விஜய்க்கு மன்னிப்பு கடிதம் அனுப்பினாரா எஸ்.ஏ.சி?

ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (12:33 IST)
நடிகர் விஜய்க்கு அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் மன்னிப்பு கடிதம் அனுப்பி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் பெயரில் திடீரென அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார் எஸ்.ஏ.சி. இதுகுறித்து தகவல் அறிந்த விஜய் அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தனது பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் 
 
மேலும் எஸ்ஏசியின் அரசியல் நடவடிக்கைகளால் அவருடன் விஜய் கடந்த பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது விஜய்க்கு எஸ்.ஏ.சி. மன்னிப்பு கடிதம் அனுப்பி இருப்பதாகவும் தனது மகன் தன்னுடன் பேச வேண்டும் என்பதே தனது நீண்ட கால ஆசை என்று குறிப்பிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
விஜய்யும் எஸ்.ஏ.சி.யும் கடந்த சில ஆண்டுகளாக பேசவில்லை என்பதை விஜய்யின் தாயார் ஷோபா அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்