மீண்டும் படம் இயக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்

வெள்ளி, 21 ஜூலை 2017 (12:36 IST)
இரண்டு வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் ஒரு படத்தை இயக்கப் போகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.



 
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பலமுகங்கள் கொண்டவர், நடிகர் விஜய்யின் அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற படத்தை இயக்கியவர், அதன்பிறகு எந்தப் படத்தையும் இயக்கவில்லை. ஆனால், ‘நையப்புடை’ மற்றும் ‘கொடி’ ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில், மறுபடியும் படம் இயக்குவதற்குத் தயாராகிவிட்டார் எஸ்.ஏ.சி. இந்தமுறை அவர் கையில் எடுத்திருப்பது, சமூகப் பிரச்னைகளுக்காக போராடிவரும் டிராஃபிக் ராமசாமி வாழ்க்கையை. படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி உள்ளன.

விரைவில் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. பல படங்களில் புதியவர்களுக்கு வாய்ப்பளித்து திறமையானவர்களை அடையாளம் காட்டிய எஸ்.ஏ.சி., இந்தப் படத்திலும் அதையே கடைப்பிடிப்பார் என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்