திட்டமிட்டு வேண்டுமென்றே சிலர் கவுண்டமணி இறந்துவிட்டதாக வதந்தி கிளப்பி வருகிறார்கள். இதனால், அவரது ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கவுண்டமணியும், அவரது குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். வதந்தியை தடுக்க வேண்டும், அதை பரப்பியவர்களை தண்டிக்க வேண்டும் என்று கவுண்டமணி சார்பில் அவரது வழக்கறிஞர் சென்னை பெருநகர காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்துள்ளார்.