ரஜினி படத்தில் நடிக்கும் மூன்று பேர்

திங்கள், 27 ஜூலை 2015 (12:56 IST)
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இசையமைப்பாளர், எடிட்டர், ஒளிப்பதிவாளர் யார் என்பது முடிவாகிவிட்டது. முன்னணி நடிகர்களில் மூன்று பேர் மட்டுமே இதுவரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பிரகாஷ்ராஜ், கலையரசன் மற்றும் அட்டகத்தி தினேஷ்.
உதிரி வேடங்களில் நடிப்பவர்களுக்கு நடிப்புப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. ஒருநாள் ரஜினியும் அதில் கலந்து கொண்டார். படத்தில் நாயகியாக ராதிகா ஆப்தே நடிக்கலாம் என்று பேச்சு உள்ளது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, ரஜினி படத்தில் நடிக்க இதுவரை ஒப்பந்தமாகவில்லை. அதனால், இது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றார்.
 
ராதிகா ஆப்தேயின் பதில் காரணமாக, ரஜினி படத்தின் நாயகி யார் என்பது இன்னும் புதிராகவே உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்