விஷால் பரத்வாஜின் அடுத்த காதல் காவியம் ரங்கூன்

புதன், 27 மே 2015 (21:34 IST)
இந்தி சினிமாவின் மதிப்பமிக்க படைப்பாளிகளில் ஒருவரான விஷால் பரத்வாஜ் அடுத்து ஒரு காதல் படத்தை எடுக்கிறார்.

காஸாபிளாங்கா ஸ்டைல் முக்கோண காதல் கதை. சைப் அலிகான், ஷாகித் கபூர், கங்கனா ரனவத் நடிக்கின்றனர்.
 

 
முக்கோண காதல் கதை என்றாலும் அது நடக்கும் காலகட்டம் இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த நேரம். பிரிட்டீஷ் மற்றும் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவம் மோதிய போது இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள் இந்தியர்களே. சொந்த சகோதரர்களே ஒருவரையொருவர் கொன்றழித்த அந்த துயர காலகட்டத்தின் பின்னணியில் தனது காதல் கதையை விஷால் பரத்வாஜ் அமைத்துள்ளார்.
 
ஓம்காரா, மெக்ஃபூல், காமினே போன்ற அருமையான படங்களைத் தந்த விஷால் பரத்வாஜ் கடைசியாக ஹைதர் படத்தை இயக்கினார். ஷாகித் கபூர் நடித்த இந்தப் படம் தேசிய விருதுகளை வென்றது எனினும் விஷாலின் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. அந்தக் குறையை ரங்கூன் போக்குமா?
 
விஷால் பரத்வாஜ் இதுவரை இயக்கிய படங்களில் ரங்கூனே அதிகப் பொருட்செலவில் எடுக்கப்படுகிறது என்பது கொசுறு தகவல்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்