வைரலாகும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் வளைகாப்பு புகைப்படம்!

வியாழன், 23 ஜூலை 2020 (07:56 IST)
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ள நடிகையாக வலம் வரும் ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் சிவகாமி கதாபாத்திரத்தின் மூலம் தன்பக்கம் ஈர்த்தார்.

தொடர்ந்து பாகுபலி 2, தானா சேர்ந்த கூட்டம், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட தான் நடிக்கும் அத்தனை படத்திலும் வித்யாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்வவதில் சிறப்பு மிக்கவர். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டிற்குள் இருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக செயல்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்ப்போது ரம்யா கிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கர்ப்பமாக இருந்தபோது வளைகாப்பு செய்த புகைப்படத்தை பகிர்ந்து "இப்போது உயிருடன் இல்லாத எனது இரண்டு பெரியம்மா எனக்கு வளைகாப்பு சடங்கு செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என கூறி பழைய நினைவுளை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ இணையத்தில் சூப்பர் வைரலாகி வருகிறது.

This picture from my Vallaikaapu ceremony with my 2 periyammas who are not alive now. #nostalgic #familylove #aunt #memories ❤❤❤ pic.twitter.com/Q613gNKM5D

— Ramya Krishnan (@meramyakrishnan) July 22, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்