தலைவர் புண்ணியத்தால் தான் இப்படி ஒரு புருஷன்... ரஜினி மகளை ஆசீர்வதிக்கும் ரசிகர்கள்!

வியாழன், 2 ஜூலை 2020 (10:44 IST)
தமிழ் சினிமாவின் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார்.

மேலும்,சௌதர்யா 2010 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அஷ்வினுக்கும், சௌந்தர்யாவிற்கும் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். ஆனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர். இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் விசாகன் என்பவரை கடந்த 2019ல் மறுமணம் செய்துகொண்டனர்.

பல பிரச்னைகளை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்த சௌந்தர்யா தற்போது கணவர் , மகன் என நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார். விசாகன் மகன் வேத் மீது அவ்வளவு பாசம் வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது தனது கணவர் விஷாகனின் பிறந்தநிலை வீட்டிலிருந்தபடியே கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு " ஹேப்பி பர்த்டே செல்லம்.... நல்ல புருஷனாக இருப்பதற்கு நன்றி என கூறி ரொமான்டிக் போட்டோவை வெளியிடுள்ளார்.

இதற்கு இணையவாசிகள் பலரும், வாழ்த்துக்கள்... இப்படியே மகிழ்ச்சியாக இருங்கள்..  தலைவர் செய்த புண்ணியம் தான் உங்களுக்கு இப்படி ஒரு கணவரை கடவுள் கொடுத்துள்ளார் என மனதார வாழ்த்தியுள்ளனர்.

#HappyBirthdayVishagan thank you for being you husband ❤️❤️❤️ happy birthday chellam

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்