புக்கிங் ஓபன் ஆனதுமே மொத்த டிக்கெட்டுன் காலி! – வெயிட்டிங்கில் பொன்னியின் செல்வன்

ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (10:58 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகும் நிலையில் முன்பதிவில் பெரும்பாலும் டிக்கெட்டுகள் விற்று முடிந்துள்ளன.

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ALSO READ: வெளிநாடு வேலைக்கு செல்பவர்கள் உஷார்..? – மத்திய அரசு எச்சரிக்கை!

இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில் செப்டம்பர் 30ம் தேதி படம் ரிலீஸாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் பொன்னியின் செல்வனுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. முன்பதிவு தொடங்கி சில மணி நேரங்களிலேயே தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. படத்திற்கான டிக்கெட்டுகள் வேகமாக தீர்ந்து விட்ட நிலையில் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்