இந்தியில் 10 நாட்களுக்குப் பிறகு பிக்கப் ஆகும் பொன்னியின் செல்வன்!

திங்கள், 10 அக்டோபர் 2022 (16:40 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்போது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிலையில் 6 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்தி பேசும் மாநிலங்களில் மிகப்பெரிய வரவேற்பு இந்த படத்துக்கு முதலில் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது மெல்ல மெல்ல படத்துக்கு நல்ல கூட்டம் வர ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்