'மெர்சல்' விஜய் மீது மதுரை காவல்நிலையத்தில் புகார்

திங்கள், 23 அக்டோபர் 2017 (13:32 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஐந்து நாட்களாக டிரெண்டிங்கில் உள்ள நிலையில் மேலும் டென்ஷனை அதிகரிக்கும் வகையில் விஜய் மீது மதுரை காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.



 
 
மெர்சல் படத்தில் விஜய் வழிபாட்டு தலங்கள் குறித்து சர்ச்சையாக வசனம் பேசியதாகவும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி புகார் மனு ஒன்றை மதுரை வழக்கறிஞர் ஒருவர் காவல்நிலையத்தில் அளித்துள்ளார்.
 
ஏற்கனவே பாஜகவினர், மருத்துவர்கள் சங்கம் ஆகியவை விஜய் மீதும் மெர்சல் படக்குழுவினர் மீதும் வழக்கு போடுவதாக கூறியுள்ள நிலையில் தற்போது வழக்கறிஞர் ஒருவர் போலீஸ் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்