சோனு சூட்டின் வீட்டின் முன் குவிந்த மக்கள்

செவ்வாய், 25 மே 2021 (22:10 IST)
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தின்போது, புலம்பெயர் மக்கள், தொழிலாலர்கள்,வெளிநாட்டு மாணவர்கள், விவசாயிகள் , ஏழைகள், ஆகியோருக்கு பெரிதும் உதவியர் சோனு சூட்.

சமீபத்தில் கொரொனா நோயாளிகள் 22 பேர் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அவர்களைக் காப்பாற்ற வேண்டுமெனக் கேட்டு இரவில் நடிகர் சோனு சூட்டிற்கு ஒரு கால் வந்துள்ளது.

தனக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டு, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சரி செய்யக் கொடுத்து,22 பேரின் உயிரைக் காப்பாற்றினார். அதேபோல் பல மாநிலங்களில் இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் அவசரத் தேவைகளுக்கு உதவினார்.

இந்நிலையில், அவரது வீட்டு வாசலில் மக்கள் பலரும் கூடி அவரிடம் உதவி கேட்டு வருகின்றனர். இதுகுறித்த ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்