கமல் சொல்வதை ஆமோதித்த பிரபல இயக்குனர்!!

வெள்ளி, 21 ஜூலை 2017 (21:40 IST)
வரிவிலக்கு பெற லஞ்சம் கொடுப்பதாக கமல் சொன்ன விஷயத்தை ஆமோதித்துள்ளார் பிரபல இயக்குனரும், நடிகருமான ரா.பார்த்திபன்.


 
 
தமிழக அரசின் ஊழலை வெளிச்சம்போட்டுக் காட்டும் வகையில் கமல் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘சினிமாவில் வரிவிலக்கு பெற மிகப்பெரிய தொகை லஞ்சமாகத் தரப்பட்டது’ என்று குறிப்பிட்டிருந்தார். 
 
அதை, நடிகரும், இயக்குனருமான ரா.பார்த்திபன் ஒப்புக் கொண்டுள்ளார். “வரிவிலக்கு பெற லஞ்சம் கொடுப்பது உண்மைதான். ‘என்னைப்போல் ஒருசிலரைத் தவிர, மற்றவர்கள் பயந்துபோய் லஞ்சம் கொடுக்கிறார்கள்’ என்று கமல் சொன்னது மிகச் சரியானது. 
 
அவர் கூறியிருக்கும் ஒருசிலரில், நானும் ஒருவன். என் படத்துக்கும் லஞ்சம் கேட்டார்கள். நான் தர மறுத்து விட்டேன். லஞ்சத்தை அவர்கள் நேரடியாகக் கேட்பதில்லை. மறைமுகமாக, குறிப்பால் உணர்த்துகிறார்கள். அப்படி கொடுக்காத பட்சத்தில், சென்சார் செய்வதில் தாமதம் ஏற்படும். அப்படி தாமதம் ஏற்பட்டாலோ, வரிவிலக்கு கிடைக்கவில்லை என்றாலோ… தயாரிப்பாளருக்குத்தானே நஷ்டம்? அதனால்தான் தயாரிப்பாளர்கள் லஞ்சம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார் ரா.பார்த்திபன்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்