கலை அடுத்த நிலைக்கு செல்லும்… ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் நம்பிக்கை!

திங்கள், 15 பிப்ரவரி 2021 (08:49 IST)
நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பி சி ஸ்ரீராம் கலை அடுத்த கட்டத்துக்கு நகரும் எனக் கூறியுள்ளார்.

இந்திய சினிமா உலகில் மிகவும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம். இவர் முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் படங்களில் பணியாற்றியுள்ளார். அத்துடன் தமிழ் ,இந்தி, மலையாளம், போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் கலை அடுத்த கட்டத்துக்கு நகரும் எனக் கூறியுள்ளார்.

நிகழ்வில் அவர் ‘எல்லோருடைய கைகளிலும் கேமரா இருப்பது (செல்போன்) ஆரோக்யமான விஷயம். 30 ஆண்டுகளுக்கு முன்னர் எப்போது எல்லோரின் கைகளிலும் கேமரா இருக்கிறதோ அப்போதுதான் ஒரு மேடையை கலைக்கான மேடையாக ஏற்றுக்கொள்வேன் எனக் கூறினார். அது இப்போது நடந்துள்ளது. இப்படி ஒரு புரட்சி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. கலை அடுத்த நிலைக்குச் செல்லும் என்று நினைக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்