’காந்தாரா’ படம் பார்த்த நிர்மலா சீதாராமன்: என்ன சொன்னார் தெரியுமா?

வியாழன், 3 நவம்பர் 2022 (19:39 IST)
’காந்தாரா’ படம் பார்த்த நிர்மலா சீதாராமன்: என்ன சொன்னார் தெரியுமா?
பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய ’காந்தாரா’ என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது 
 
இந்த படம் கன்னடம் தமிழ் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் மொத்தம் 300 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்து உள்ளது என்பதும் இந்த படம் வெறும் 20 கோடி  செலவில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தை நேற்று பெங்களூரில் உள்ள திரையரங்கில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பார்த்தார். அதன் பிறகு அவர் இயக்குனர் ரிஷப் ஷெட்டிக்கு பாராட்டு தெரிவித்தார் 
 
இந்த படம் நமது இந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் படமாக அமைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். மேலும் படம் பார்த்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்