நயன், த்ரிஷா சம்பளத்தை நெருங்கிய சாய்பல்லவி.. சீதையாக நடிக்க இத்தனை கோடி சம்பளமா?

Siva

திங்கள், 8 ஏப்ரல் 2024 (13:14 IST)
தென்னிந்திய திரை உலகை பொருத்தவரை த்ரிஷா மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் தான் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பளத்தை நடிகை சாய் பல்லவி நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.

பாலிவுட் திரை உலகில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் ராமாயணம். இந்த படத்தில் ராமராக ரன்பீர் சிங், சீதையாக சாய்பல்லவி, ராவணனாக யாஷ் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 600 கோடி என்றும் இந்த படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் சீதை கேரக்டரில் நடிக்க நடிகை சாய் பல்லவிக்கு 10 கோடி சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் தெலுங்கு படங்களில் சாய் பல்லவி நடித்துக் கொண்டிருந்த நிலையில் இரண்டு அல்லது மூன்று கோடி மட்டுமே சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நிலையில் ராமாயணம் படத்திற்காக மொத்தமாக கால்ஷீட் கொடுத்து உள்ளதால் அவருக்கு 10 கோடி சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

நயன்தாரா பத்து கோடியும் திரிஷா 12 கோடியும் தற்போது சம்பளம் வாங்கி வரும் நிலையில் இவர்களது சம்பளத்தை கிட்டத்தட்ட சாய் பல்லவி தொட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்