கவலை வேண்டாம் இயக்குனரின் படத்தில் நயன்தாரா

செவ்வாய், 22 நவம்பர் 2016 (13:57 IST)
மாயா படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகி மையப் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்துள்ளார் நயன்தாரா. டோரா, அறம், கொலையுதிர்காலம் படங்களைத் தொடர்ந்து மேலும் ஒரு நாயகி மையப் படத்தில் அவர் நடிக்க உள்ளார்.


 

இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை, யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் படங்களின் இயக்குனர் டிகே எழுதுகிறார். படத்தை அவரே இயக்கக்கூடும். யார் இயக்குனர் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இந்தப் படம் ஹாரர் த்ரில்லராக தயாராக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்