திருமணத்திற்கு பிறகு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நமீதா ..! பாராட்டிய ரசிகர்கள் !

சனி, 24 நவம்பர் 2018 (11:43 IST)
நயன்தாரா காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா கொஞ்ச நாட்களிலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் கிறங்கடிக்க செய்தார். அவருக்குமிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இங்கே இருக்கிறது. மச்சான்ஸ் என அவர் சொன்னால் அதை ரசிக்கும் பலர் இங்கு மட்டுமல்ல மலையாளத்திலும் இருக்கிறார்கள்.
 
ஹீரோயினாக இருந்தவர் படங்களில் கவர்ச்சி தோற்றங்களில் நடித்து வந்தார். பின் வாய்ப்புகள் இல்லாததால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் கலந்துகொண்டார்.
 
அதற்கு பிறகு நமீதா தனது நீண்ட நாள் நண்பர் வீரேந்திர சவுத்ரியை  திருமணம் செய்து கொண்டு அழகான வாழக்கையை வாழ்ந்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது மீண்டும் சினிமா பக்கம் வந்துள்ளார் நமீதா. ஆனால் இனி வரும் படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடிக்க மாட்டேன் என முடிவெடுத்துவிட்டாராம். இது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், இந்த முடிவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 
 
மேலும் நயன்தாராவை போன்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடிக்க போவதாகவும் நமீதா கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்