நாய் சேகர் படத்தின் ரிலீஸ் தேதி என்ன? வடிவேலு கொடுத்த அப்டேட்!

திங்கள், 12 செப்டம்பர் 2022 (15:21 IST)
நாய்சேகர் படத்தின் ரிலீஸ் பற்றி வடிவேலு ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார்.

வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பாடல்களுக்கு நடனம் அமைக்க பிரபுதேவா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது சம்மந்தமான அறிவிப்பை லைகா வெளியிட்டது.

இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. சென்னை, மைசூர் என அடுத்தடுத்து நடந்த படப்பிடிப்பில் வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் நடித்து முடித்துள்ளனர். கடைசியாக படத்தின் பாடல் ஒன்று படமாக்கப்பட்ட நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துரிதமாக நடந்து விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீண்ட நாட்களாக வடிவேலுவை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்களின் ஏக்கம் வெகுவிரையில் தீரும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இன்று வடிவேலு இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் நிலையில் “நாய் சேகர்” படத்தின் ரிலீஸ் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார். ”அந்த படத்தை அக்டோபர் 7 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்