குடும்பத்தில் நடக்கும் சிறு பிரச்சனையை ஊதி பெரிதாக்கி, அவர் தன் வசதிக்காக ஜாதி பெயர் சொல்லி திட்டியதாக புகார் அளித்துள்ளார். அவரை அவரின் குடும்பத்தினர் தப்பாக வழி நடத்துகிறார்கள். இது நம் குடும்ப பிரச்சனை. வா நாம் அமர்ந்து பேசுவோம் என கெஞ்சிப் பார்த்தேன். ஆனால், அவர் ஏற்கவில்லை. நடந்தது நடந்து விட்டது. இப்போதும் அவர் மீது எனக்கு கோபம் இல்லை. அவருக்கும் என் மீது பிரியம் இருக்கிறது. கடவுள் எங்களை சேர்த்து வைப்பார். விரைவில் நாங்கள் இணைந்து வாழ்வோம்” என அவர் கூறியிருந்தார்.