இன்றைய பூஜை முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த விஜய்சேதுபதி, கூறியதாவது, 'த்ரிஷா நடித்த விண்ணை தாண்டி வருவாயோ' படத்தை பார்த்து வியந்தேன். அந்த படத்தில் ஜெஸ்ஸியை பார்த்து மயங்கிய ஆயிரக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன். த்ரிஷாவுடன் இணைந்து நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. அந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறியுள்ளது' என்று கூறினார்.
இந்த படம் குறித்து த்ரிஷா கூறியபோது, ' ஒரு முழுநீள காதல் படத்தில் நான் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்த படத்தில் ஒரு புது ஜோடி உருவாகியுள்ளதால் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.