கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான "மூக்குத்தி அம்மன்" மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதில், நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மன் ஆக நடிக்க இருப்பதாகவும், சுந்தர் சி இயக்குநராக அறிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இப்படத்தின் பூஜை மார்ச் 6 ஆம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாகவும், அன்றே படப்பிடிப்பும் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.