பிப்ரவரி மாதம் தொடங்கும் ராம்- மிர்ச்சி சிவா திரைப்படம்

வியாழன், 26 ஜனவரி 2023 (15:11 IST)
இயக்குனர் ராம் தற்போது ஏழு மலை ஏழு கடல் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்துக்கு ஏழுகடல் ஏழுமை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்துக்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நடிக்க உள்ளார். இதை சிவா, சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் கோயம்புத்தூரில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்