மாறுபட்ட கோணத்தில் சொல்லிருக்கோம், வேறுபட்ட கோணத்தில் காட்டியிருக்கோம் என்று காதலை விதவிதமாக கைமா செய்கிறது தமிழ் சினிமா. இதே சுலோகத்துடன் இன்னொரு படமும் தயாராகியிருக்கிறது. படத்தின் பெயர் மெய்மறந்தேன்.
கண்டதும் காதல், காணாமல் காதல், பணத்தால் காதல், குணத்தால் காதல் என்று பலவழிகளில் காதலை தமிழ் சினிமாவில் சொல்லியிருக்கிறார்கள். எங்கள் படம் இதிலிருந்து மாறுபட்டது என்றார் படத்தின் இயக்குனர் ஜி.மணிவண்ணன்.
அப்படி என்ன வித்தியாசம்?
நாயகியின் நல்ல குணத்தைப் பார்க்கும் நாயகன் உடனடியாக அவள் மீது காதல் கொள்கிறான் (குணத்தால் காதல்...?). தனது காதலை பெற்றோரிடம் சொல்லி அவர்களின் சம்மதத்தையும் வாங்குகிறான். அதன் பிறகு காதலியை தேடினால், அவள் மிஸ்ஸிங்.