"பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் மீரா பதிவிட்ட முதல் பதிவு" - கண்டந்துண்டமாக்கிய ரசிகர்கள்!

திங்கள், 29 ஜூலை 2019 (17:49 IST)
மிஸ் சவுத் இந்தியா அழகி பட்டத்தை பெற்ற மீரா மிதுன் மாடல் அழகிகளை வைத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களின் பண மோசடி செய்ததாக கொடுத்த பட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டனர். 


 
பின்னர் பிக்பாஸில் நுழைந்த அவர் போட்டியாளர்களிடமும் , மக்களிடமும் அதிக வெறுப்பை சம்பாதித்தார். இருந்தும் அவரை கடந்த மூன்று வாரங்களாக தக்கவைத்து வந்தனர். இதற்கிடையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட டாஸ்க்கில் சேரன் தன்னை தகாத இடத்தில தொட்டுவிட்டதாக கூறி அபாண்டமாக பழி சுமத்தினார். இதனால் மக்களின் அதிக வெறுப்பை சம்பாதித்து அசிங்கப்பட்டு வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  
 
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ள மீரா மிதுன் மோசமான கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு "எனக்கு ஆதரவளித்த எல்லோருக்கும் நன்றி லவ் யூ ஆள் என்று கூறி பதிவிட்டுள்ளார். 


 
இதனை கண்ட ரசிகர்கள் "உனக்கு யாரும் ஆதரிக்கவில்லை நீயே அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறாய்" அப்புறம் உன் பேண்டை பிக்பாஸ் வீட்டிலேயே மறந்து வச்சுட்டு வந்திட்டியா? என்றெல்லாம் கூறி கிண்டலடித்து வருகின்றனர்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்