நடுவீட்டில் தந்தை பிணம்: அடுத்த படத்திற்கு கதை கேட்ட நடிகர்

செவ்வாய், 27 ஜூன் 2017 (05:57 IST)
சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'மரகத நாணயம்' இந்த படத்தில் வெற்றியால் படக்குழுவினர் அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கும்போது ஒருவர் மட்டும் சோகமாக உள்ளார். அவர்தான் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த டேனியல்



 


இந்த படத்தின் கதையை சொல்ல இயக்குனர் போன் செய்தபோது, டேனியலில் தந்தை இறந்துவிட்டாராம். நடுவீட்டில் பிணம் இருக்கும் நிலையில், அந்த துக்கத்தையும் மீறி இயக்குனரிடம் கதை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

தற்போது படம் வெளியாகி தனது கேரக்டர் பெரிதாக பாராட்டப்பட்டு வரும் நிலையில் இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள தந்தை உயிருடன் இல்லையே என்ற சோகம் டேனியலை வாட்டி எடுக்கின்றதாம். இதை இந்த படத்தின் வெற்றி விழாவின்போது கூறி டேனியல் கண்ணீர் விட்டதும் அரங்கமே சோகத்தில் மூழ்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்