கேரளாவிலிருந்து வரும் நடிகைகள் உடை விஷயத்திலும், பிற விஷயத்திலும் காட்டும் கறார் திரையுலகில் பிரபலம். மலையாளத்தின் புதிய வரவு, மஞ்சிமா மோகன். கௌதமின் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கில் தொடர்ந்து நடிப்பேன் என்பவர், முத்தக்காட்சியில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்கிறார். அதேபோல் தனது உடல்வாகுக்கு ஏற்ற உடைகள் அன்றி வேறு உடைகளை போட மாட்டேன் என்றும் கறார் காட்டுகிறார். அதாவது கணுக்காலுக்கு மேல் தெரியும் உடையென்றால் நோ தானாம்.