ஜெய் பீம் மணிகண்டன் இயக்கியுள்ள நரை எழுதும் சுயசரிதம் ஓடிடி ரிலிஸ்!

வியாழன், 3 பிப்ரவரி 2022 (10:23 IST)
நடிகரும் திரைக்கதை எழுத்தாளருமான மணிகண்டன் தனது அறிமுகப்படமான நரை எழுதும் சுயசரிதம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்துள்ளார்.

காதலும் கடந்து போகும், காலா, சில்லுக்கருப்பட்டி மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்களின் மூலம் நடிகராக கவனத்தை ஈர்த்தவர் மணிகண்டன். இவர் திரைக்கதை எழுத்தாளராகவும் விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் இப்போது இவர் இயக்குனராக அறிமுகமாகியுள்ள நரை எழுதும் சுயசரிதம் எனும் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் சோனி லிவ் தளத்தில் வெளியாகியுள்ளது. வேலையிலிருந்து ஓய்வு பெறும் ஒரு முதியவரும், வேலை தேடி அலைந்துகொண்டிருக்கும் ஒரு இளைஞனுக்கும் இடையே நடக்கும் கதைதான் இந்த படம். இந்த படம் இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்