பேரழகன் படத்தின் இயக்குனர் மரணம்

புதன், 10 ஆகஸ்ட் 2016 (16:19 IST)
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான பேரழகன் என்ற படத்தை இயக்கிய பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் இன்று கேரளாவில் மரணமடைந்தார்.


 

 
மலையாள திரைப்பட உலகில் சசி சங்கர் ‘நரயம்’ என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அவரது முதல் படம் தேசிய விருது பெற்றது. 
 
அவர் மலையாளத்தில் இயக்கிய குஞ்சி கூனன் என்ற படத்தை, ரீமேக் செய்து தமிழில் நடிகர் சூர்யாவை வைத்து பேரழகன் என்ற தலைப்பில் இயக்கினார்.
 
சசி சங்கர் இன்று தனது வீட்டில் சுயநினைவு இன்றி விழுந்து கிடந்துள்ளார். உடனே அவரது வீட்டார்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்