மாஸ்டர் படத்திற்கு பின் மிஸ் செய்து வரும் மாளவிகா மோகனன்

வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (21:20 IST)
தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்து வரும் மாளவிகா மோகனன் அடுத்தடுத்து ஒரு சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தினார். சூரரைப்போற்று படத்திற்கு பின்னர் சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் மாளவிகா மோகனன் தான் நாயகி என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது மாளவிகாவுக்கு பதிலாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் ஆகி விட்டதாக கூறப்படுகிறது
 
இதேபோல் கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கும் படமொன்றில் நடிக்கவும் மாளவிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. திடீரென என்ன நடந்ததோ தெரியவில்லை இந்த படத்திலும் மாளவிகா நடிக்கவில்லை என்றும் தற்போது இந்த படக்குழுவினரும் ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது
 
தளபதி விஜய் படத்தில் நடித்தால் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியும் என்ற நிலையில் மாளவிகா மோகனனுக்கு மட்டும் வாய்ப்புகள் வந்து மிஸ் ஆகிக்கொண்டே இருப்பதாக கோலிவுட் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்