எஸ் ஜே சூர்யாவால் தள்ளிப்போன மாநாடு… மீண்டும் படப்பிடிப்பு எப்போது?

திங்கள், 1 மார்ச் 2021 (07:52 IST)
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பை தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களில் எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்த படம் தற்போது முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. முன்னதாக இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை உருவாகி கவனத்தை ஈர்த்திருந்தன.

இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டுமே இன்னும் நடத்தப்பட வேண்டி உள்ளது. ஆனால் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள எஸ் ஜே சூர்யா இப்போது சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் நடித்து வருவதால் அவர் இல்லாமல் படப்பிடிப்பு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டான் படப்பிடிப்பை முடித்துவிட்டு அவர் மார்ச் மாதம் பின்பகுதியில் வந்து மாநாடு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்