’மாநாடு’ டப்பிங்: எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்ட புகைப்படம்!

புதன், 25 ஆகஸ்ட் 2021 (18:13 IST)
’மாநாடு’ டப்பிங்: எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்ட புகைப்படம்!
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வந்த ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது 
 
முதல்கட்டமாக சிம்புவின் டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடித்த மற்ற நடிகர் நடிகைகளின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இன்று தனது பகுதியில் டப்பிங் பணியை முடித்துள்ளார்
 
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில நாட்களில் ’மாநாடு’ படத்தின் தொழில்நுட்ப பணிகள் அனைத்தும் முடிந்து விடும் என்றும் வரும் ஆயுத பூஜை தினத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்